Wednesday, November 28, 2012

டிசம்பர் 2, 2012

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்பு டன் அழைக்கிறோம். புதிய திருவழிபாட்டு ஆண்டின் முதல் நாளாகிய இன்று, ஆண்டவ ரின் இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். மண்ணுலகில் நிலவும் குழப்பமும், விண்வெளியில் தோன்றும் அடையாளங்களும் ஆண்டவரின் வரு கையை முன்னறிவிக்கும் என இயேசு முன்னறிவித்துள்ளார். நமது மீட்புக்காக நாம் எப் பொழுதும் தயாராக இருக்க வேண்டுமென இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழித்தி ருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் தாவீதின் குலத்தில் தோன்றும் நீதியின் தளிரைப் பற்றிய அறிவிப்பைத் தருகிறது. இறைவாக்கினர் எரேமியா முன்னறிவிக்கும் இந்த நீதியின் தளிர் இயேசு கிறிஸ்துவே. அனைத்துலக அரசரான அவர், உலகில் நீதியையும் அமைதியை யும் நிலைநாட்டுவார் என்று எரேமியா வழியாக ஆண்டவர் எடுத்துரைக்கிறார். வாழும் ஆண்டவரிடமே நாம் பாதுகாப்பு தேட வேண்டும் என்பதை உணர அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு உகந்த வகையில் நீதியுள்ளவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
மேன்மைக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் அன்பில் நாம் வளர வேண்டும் என்ற திருத்தூர் பவுலின் ஆவலை வெளிப்படுத்துகிறது. நம் ஆண்டவர் மீண்டும் வரும்போது, அவர் முன்னிலையில் குற்றமற்றவர்களாக நிற்கும் பொருட்டு தூய உள்ளம் கொண்டவர் களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். திருத்தூதர்களிடம் இருந்து திருச்சபை கற்றுக் கொண்ட புனிதம் நிறைந்த வாழ்க்கை முறையில் முன்னேற பவுல் நம்மை அழைக்கி றார். கிறிஸ்துவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்பவர்களாய் வாழ வரம் கேட்டு, இந்த வாசகத்துக்கு செவிமடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. புனிதம் நிறைந்தவராம் இறைவா, 
   உமது திருமகனின் வருகைக்காக இந்த உலகைத் தயார் செய்பவர்களாக திகழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் நிறை வாகப் பொழிந்து, புனிதத்தில் வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வல்லமை நிறைந்தவராம் இறைவா,
   நீரே படைப்புகள் அனைத்தின் உண்மையான அரசர் என்பதை உணர்ந்தவர்களாய், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக தூய வாழ்வு வாழ உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மகிமை நிறைந்தவராம் இறைவா,
 
உமது மாட்சிக்கு எதிரான சிலை வழிபாடுகள் அனைத்தும் எம் நாட்டு மக்கள் நடுவில் இருந்து ஒழியவும், உண்மை இறைவனாகிய உம்மை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் கொள்ளவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இரக்கம் நிறைந்தவராம் இறைவா,
    அன்பு, அமைதி, நீதி, உண்மை, உடல்நலம் ஆகியவற்றுக்காக ஏங்கித் தவிக்கும் உள் ளங்களில், உமது இரக்கத்தால் ஆறுதல் அளித்து, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைக் காணச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. மேன்மை நிறைந்தவராம் இறைவா,
   உம் திருமகனின் வருகைக்காக எப்பொழுதும் விழித்திருந்து மன்றாடுபவர்களாய் வாழும் வரத்தை, எங்கள் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவ ருக்கும் வழங்கி, உடல், உள்ள, ஆன்ம சுகத்தோடு பாதுகாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.