Wednesday, November 21, 2012

நவம்பர் 25, 2012

கிறிஸ்து அரசர் பெருவிழா

திருப்பலி முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன் புடன் அழைக்கிறோம். என்றென்றும் ஆட்சி செய்பவரான நம் ஆண்டவர் இயேசுவின் அரசத் தன்மையைப் பற்றி சிந்திக்க இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்துலகின் அரசரான நம் ஆண்டவர், ஆளுநன் பிலாத்து முன்னிலையில் ஒரு கைதியாக நிற்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. உண்மையை வெளிப்படுத் தவே இறைமகனாகிய இயேசு, மானிடமகன் ஆனார். அவருடைய வருகைக்காக இந்த உலகைத் தயாரிக்கும் பணி ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் உண்டு என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஆண்டவரும் அரசருமான இயேசுவைப் பற்றிய உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் வாழும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   இன்றைய முதல் வாசகம் நமக்காக மனித உடலேற்ற இறைமகனின் விண்ணக மகிமை யைப் பற்றி எடுத்துரைக்கிறது. தந்தையாம் இறைவன் அவருக்கு ஆட்சியுரிமையும் அர சும் மாட்சியும் வழங்கி இருக்கிறார். உலகின் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழி யினரும் அவரைப் பணிந்து வணங்க வேண்டும் என்பதே தந்தையாம் இறைவனின் திரு வுளம். என்றுமுள கிறிஸ்துவின் முடிவற்ற அரசில் பங்குபெற வரம் கேட்டு, இந்த வாச கத்தை செவியேற்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
இறையரசுக்குரியவர்களே,
   இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்து அரசரின் வருகையைப் பற்றி எடுத்துரைக் கிறது. நம் ஆண்டவர் இயேசு மண்ணுலக அரசர்களுக்கெல்லாம் மேலான அரசர் என்பது இங்கு தெளிவாக கூறப்படுகிறது. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரு மான அவரே அனைத்துக்கும் தொடக்கமும் முடிவுமாக இருக்கிறார். நமது அரசராம் கிறிஸ்துவில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக வாழ வரம் கேட்டு, இந்த வாச கத்தை செவியேற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. திருச்சபையின் அரசராம் இறைவா, 
   உமது முடிவில்லா அரசை உலகெங்கும் நிறுவும் உள்ளார்வத்தோடு, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், நற்செய்தியின் தூதுவர்களாக வாழும்  வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அரசர்களின் அரசராம் இறைவா,
   நாடுகளை ஆட்சி செய்யும் தலைவர்கள் அனைவரும், உமது அரசை உலகில் கட்டி யெழுப்பவும், மக்கள் அன்பிலும் ஒற்றுமையிலும் வளர்க்கவும் உழைக்க
த் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மாட்சியின் மன்னராம் இறைவா,
 
எம் நாட்டு மக்கள் அனைவரும் உம் திருமகனின் மேலான ஆட்சியை விரும்பித் தேட வும், உண்மையின் நற்செய்தியை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. மகிழ்ச்சியின் மன்னராம் இறைவா,
   உலகத்தின் மாயச் சூழலில் சிக்கி, பொய்மையை வாழ்வின் ஆதாரமாக கொண்டு வாழும் மக்கள் அனைவரும், உமது உண்மையின் அரசை விரும்பித் தேடி முடிவில்லா மகிழ்ச்சியில் நிலைத்திருக்க
உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வெற்றி வேந்தராம் இறைவா,
   தொடக்கமும் முடிவுமாக இருக்கும் உமது அரசத் திருவிருந்தில் பங்குபெற்று என் றென்றும் மகிழ்ந்திருக்குமாறு எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனை வருக்கும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.