Thursday, March 21, 2013

மார்ச் 24, 2013

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

திருவழிபாட்டு முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
   நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். கழுதைக்குட்டி மீது தொடங்கும் கிறிஸ்து வின் பயணம் சிலுவை மரத்தில் முடிவடைந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். 'ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!' என்று ஆர்ப்பரித்து இயேசுவை அரச ராய் வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், 'அவனை சிலுவையில் அறையும்!' என்ற கூக் குரலால் அவரை மரணத்துக்கு தீர்ப்பிடுவதைக் காண்கிறோம். கிறிஸ்துவின் பாடுகளின் பயணத்தில் பங்கேற்று, நமது பாவங்களுக்காக மனம் வருந்த திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் மீது கொண்ட அன்பிற்காக தன்னையே சிலுவையில் பலியாக்கி, நற் கருணையில் உணவாக வழங்கும் இயேசுவின் அன்பை சுவைக்க நாம் அழைக்கப்படு கிறோம். கிறிஸ்துவின் அன்புக்கு பதிலன்பு செலுத்தும் உண்மையுள்ள சீடர்களாக வாழும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா கிறிஸ்துவின் திருப்பாடுகளை முன்னறிவிப்பதை காண்கிறோம். கிறிஸ்துவின் தாழ்ச்சியும் பொறுமையும் இங்கு தெளி வாக எடுத்துரைக்கப்படுகிறது. அடிப்போருக்கு தன் முதுகையும், தாடியைப் பிடுங்குவோ ருக்கு தன் தாடையையும் அவர் ஒப்புவித்தார். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ் வோருக்கும் தன் முகத்தை மறைக்கவில்லை. தந்தையாம் இறைவனில் நம்பிக்கை கொண்டவராய் தன்னை சிலுவை மரணத்துக்கு கையளித்த இயேசுவை பின்பற்றி வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்திற்கு நாம் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கிறிஸ்துவுக்குரியவர்களே,
     இன்றைய இரண்டாம் வாசகமும், நம் ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியை பற்றி பேசு கிறது. கடவுள் வடிவில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. சிலுவை மரணம் வரை இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிந்த இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் சிலுவை வழியை தொடர்ந்து சென்று, அவரது மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு செவிகொடுப்போம்.

இறைமக்கள் மன்றாட்டு:
1. மாட்சி அளிப்பவராம் இறைவா,
   உமது திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக சிலுவை மரணம் வரை கீழ்ப்படிந்த உம் திருமகனைப் பின்பற்றி வாழும் வரத்தை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத் தார் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. நிறைவு தருபவராம் இறைவா,
   உம்மை குறித்த மனிதரின் தேடல், சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவிலேயே நிறைவு பெறுகிறது என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள நீர் உதவ
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மீட்பு வழங்குபவராம் இறைவா,
   கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக மனித குலத்துக்கு நீர் அளித்த மீட்பை சுவைத்து மகிழும் வரத்தை எம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. இரக்கம் காட்டுபவராம் இறைவா,
   எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அருள் பொழிபவராம் இறைவா,
   எம் பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர் வதித்து, கிறிஸ்து இயேசுவின் உண்மை சீடர்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.